search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் டிரைவர் கைது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரைவர் யதுவை சில தினங்களுக்கு தற்காலிகமாக பணிக்கு வர கேரள அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.
    • போலீசார் தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவரான யது, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் வாகனத்துக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேயர், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ., சகோதரர் ஆகியோர் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேயர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சின் டிரைவர் யதுவை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் மேயர் உள்ளிட்டோர் மீது அரசு பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு எதுவும் பதியவில்லை. மேலும் டிரைவர் யதுவை சில தினங்களுக்கு தற்காலிகமாக பணிக்கு வர கேரள அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.

    மேயர் மற்றும் டிரைவருக்கு இடையே நடந்த மோதல் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய பஸ்சில் இருந்த கேமராவை பரிசோதிக்க மந்திரி கணேஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால் அந்த பஸ் கேமராவின் மெமரி கார்டு மாயமானது. அதனை யாரும் திட்டமிட்டு எடுத்துச் சென்றார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.


    இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவரின் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி ஆபாசமாக வசைபாடுவதாகவும், அதனை தடுக்கக்கோரியும் மேயர் ஆர்யா ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேயருக்கு ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல் அனுப்பியதாக அரசு பஸ் டிரைவரான கரை யாட்டுகுன்னல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித்(வயது35) என்பவர் மீது திருவனந்தபுரம் மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர்.

    அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×